ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு வங்கதேசம் சென்ற நியூஸிலாந்து அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் போராடி சமன் செய்தது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி இன்று இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு டுனெடின் நகரில் நடைபெற்றது.

Advertisement

மழையால் தலா 30 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு சோரிஃபுல் இஸ்லாம் வீசிய முதல் ஓவரிலேயே ரச்சின் ரவீந்திரா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்ததாக வந்த ஹென்றி நிக்கோலஸும் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். இதனால் 5/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற நியூசிலாந்துக்கு மற்றொரு தொடக்க வீரர் வில் எங் மற்றும் கேப்டன் டாம் லாதம் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர்.

Advertisement

அந்த வகையில் 2ஆவது ஓவரில் சேர்ந்த இந்த ஜோடி மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சரிவை சரி செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டது. நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடிய இந்த ஜோடியில் இருவருமே அரை சதம் கடந்து 26 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 3ஆவது விக்கெட்டுக்கு 171 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது கேப்டன் டாம் லாதம் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 92 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அந்த நிலையில் வந்த மார்க் சேப்மேன் 20, ரன்களில் அவுட்டானாலும் மறுப்புரம் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் எங் 14 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் 30 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்களை எடுத்த் எடுத்தது.வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சோரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதைதொடர்ந்து அதே 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் ஆரம்ப முதலே நியூசிலாந்து பவுலர்களின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறியது. அதனால் பெரிய ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக அனமுல் ஹைக் 43, தவ்ஹீத் ஹ்ரிஃடாய் 33, அஃபிப் ஹொசைன் 38 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஆடம் மில்னே, இஸ் சோதி, ஜோஸ் கிளார்க்சன் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதனால் 30 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை மட்டுமே எடுத்தது.

Advertisement

இதன்மூலம் நியூசிலாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்ததியதுடன், 1 – 0 (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. மேலும் 171 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேசத்தை தோற்கடிக்க முக்கிய காரணமாக இருந்த வில் எங் ஆட்டநாயனாக அறிவிக்கப்பட்டார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News