இந்தியா - பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டிக்கான நாள் நெருங்க நெருங்க, எப்பொழுதும் போட்டியைச் சுற்றி நிறைய விவாதங்களும் கருத்துகளும் வெளிவந்து கொண்டே இருக்கும். அந்தவகையில் இந்தியா - பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து அதிகப்படியான கருத்துக்கள் வெளிவரும். இந்த முறையும் அதற்கு விதிவிலக்கு இல்லாமல், பாகிஸ்தான் தரப்பிலிருந்து அதிக கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

Advertisement

இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கு முன்பாக, ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்தப் போட்டி இலங்கையின் கண்டி மைதானத்தில் செப்டம்பர் இரண்டாம் தேதி நடைபெறுகிறது. இலங்கையில் வைத்து ஆஃப்கானிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வென்று பாகிஸ்தான அணி ஆசியக் கோப்பைக்காக நாடு திரும்பி இருக்கிறது.

Advertisement

இந்நிலையில் பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்திய அணி எல்லா விதத்திலும் கீழே இருப்பதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் பரபரப்பான கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய சல்மான் பட், “இந்தியாவுக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி என இரண்டு பெரிய பேட்டர்கள் இருக்கிறார்கள். மற்ற இளம் பேட்டர்கள் ஒழுக்கமான அளவில் கிரிக்கெட் போட்டிகள் விளையாடி இருந்தாலும் கூட, அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி போன்ற பெரிய அழுத்தம் மிக்க போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டது கிடையாது. பாகிஸ்தானில் பாபர், ரிஸ்வான், சதாப்கான், ஷாஹீன் என்று முக்கிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவை விட அதிகம்.

பாகிஸ்தான் நன்றாக விளையாடுகிறது. அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பங்கு என்ன என்பது தெரியும். எங்களிடம் மூன்று வேகபந்துவீச்சாளர்கள் மணிக்கு 90 மைல் வேகத்தில் வீசுகிறார்கள். இந்தியாவை எடுத்துக் கொண்டால் இதில் ஒன்று இரண்டு பேர்தான் இருக்கிறார்கள். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விக்கெட்டுகளை எடுத்து விட்டால் இந்தியாவின் பேட்டிங் யூனிட் எளிதில் உடைந்து விடுவதாக இருக்கிறது. 

இதற்கு பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகின்ற உயர் அழுத்தமும் ஒரு காரணியாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு தங்களிடம் உள்ள 18 முதல் 20 வீரர்கள் பற்றியான தெளிவு இருக்கிறது. மேலும் வெற்றி பெறுவதற்கு அவர்களில் யாரை முன்னோக்கி கொண்டு செல்வது என்று அவர்களுக்கு தெரியும். அப்படியே இந்தியாவை எடுத்துக் கொண்டால் வேகப்பந்து வீச்சில் சில கவலைகள் இருக்கிறது. அவர்கள் முழு வீச்சில் செல்வார்களா? என்று தெரியாது” என தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News