இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி பென் டக்கெட் (51), லியாம் லிவிங்ஸ்டோன் (43) ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பென் டக்கெட் 52 ரன்களைச் சேர்த்தார். 

Advertisement

இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 40 ரன்களைச் சேர்த்த்தை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்த்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

இந்நிலையில் இந்திய அணியின் இந்த தோல்விக்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம் என முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "நீங்கள் உங்கள் நேரத்தை எடுத்துக்கொள்ளும்போது, ​​ஆடுகளத்தின் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை நீங்கள் சரியாக கணித்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் 20-25 பந்துகளை எடுத்துக்கொண்டு நிலைமையை சரிசெய்ய முடியாது. அது மற்ற பேட்டர்களுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

நீங்கள் அந்த பெரிய ஷாட்களை விளையாட விரும்பவில்லை என்றால், அது பரவாயில்லை, ஆனால் நீங்கள் இன்னும் ஸ்ட்ரைக்கை சுழற்றிக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு டாட் பந்துகளை விளையாட கூடாது. இப்போட்டியில்  ஹர்திக் பாண்டியா 35 பந்துகளில் 40 ரன்கள் எடுத்ததை நீங்கள் பார்க்கலாம், ஆனால் அவரது இன்னிங்ஸில் மற்ற பேட்ஸ்மேன்களுக்கும் அழுத்தம் கொடுக்கும் பல புள்ளிகள் உள்ளன.

இந்தியா அதைப் பற்றி சற்று சிந்திக்க வேண்டிய அவசியத்தில் உள்ளது. நீங்கள் உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் குறைந்த இலக்கைக் கொண்டிருந்தாலும், நீங்கள் ஸ்கோர்போர்டை நகர்த்த வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கவாத் டி20 போட்டியானது நாளை மறுநாள் (ஜனவரி 31) புனேவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News