மைதானத்தில் நுழைந்து விராட் கோலியை கட்டியணைத்த ரசிகர்; வைரலாகும் காணொளி!

Updated: Mon, Jan 15 2024 14:58 IST
Image Source: Google

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களம் இறங்கிய விராட் கோலி 14 மாதத்திற்கு பிறகு இந்திய டி20 அணியில் இடம் பெற்று இருந்தார். இதனால் நேற்றைய ஆட்டத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். இந்த போட்டியில் விராட் கோலி தொடக்க வீரராக இல்லாமல் எப்போதும் போலவே நம்பர் மூன்றாவது வீரராக களம் இறங்கி பதினாறு பந்துகளை எதிர்கொண்டு 29 ரன்களை சேர்த்தார்.

இதில் 5 பவுண்டரிகள் அடங்கும். விராட் கோலியின் அபார ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல கொண்டாட்டத்தை கொடுத்தது. இந்த நிலையில் இந்திய அணி பில்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மைதானத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவர் விராட் கோலியை கட்டிப்பிடித்து காலில் விழுந்தார். இதனை அடுத்து மைதானத்தில் இருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகர்களை தூக்கி இழுத்துச் சென்றனர்.

அப்போது விராட் கோலி அந்த ரசிகர்களை ஏதும் செய்ய வேண்டாம் என்று கூறினார். இந்த நேரத்தில் காவல்துறையினர் அந்த ரசிகரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கோலியின் மிக தீவிர ரசிகர் என்றும் கோலியை கட்டி பிடிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.

 

விராட் கோலி, தோனி போன்ற விளையாடும் போது இது போல் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வாடிக்கையாக்கிவிட்டது. எனினும் வீடுகளில் பாதுகாப்புக்கு பிசிசிஐ முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் கோலியை கட்டிப்பிடித்து ரசிகர் மைதானத்திற்குள் புகுந்த காணொளி தற்போது சமூக வேதத்தில் ஆகிய வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை