ஜார்வோ நீங்கள் இப்படி செய்வதை நிறுத்துங்கள் - அஸ்வின்!

Updated: Sat, Aug 28 2021 14:58 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 2 போட்டிகளிலும், தற்போது நடந்து வரும் 3வது போட்டியிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இது ஒரு பக்கம் சர்ச்சையாகி வருகிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி, தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்றைய போட்டியின் போது ரோஹித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறிய தருணத்தில், விராட் கோலிக்கு பதிலாக ஜார்வோ என்ற ரசிகர் கையில் பேட்டுடன் களமிறங்க வந்தார். இதனை கவணித்த மைதான ஊழியர்கள் உடனடியாக அவரை குண்டுக்கட்டாக மைதானத்திலிருந்து வெளியேற்றினர். மேலும் ஜார்வோ களமிறங்க வந்த காணொளி சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. 

இந்நிலையில் நேற்றைய மூன்றாவது நாள் ஆட்டம் பற்றி அஸ்வின், 'ரோகித் சர்மா, புஜாரா மற்றும் கோலி ஆகியோரின் சிறப்பான திறமை இன்றைய ஆட்டத்தில் வெளிப்பட்டது. ஜார்வோ நீங்கள் செய்வதை நிறுத்தங்கள்' என்று ட்விட்டரில் பதிவிட்டார்.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

டேனியல் ஜார்விஸ் என்னும் இங்கிலாந்து ரசிகர், இப்படி ஆட்டம் நடக்கும்போதே மைதானத்துக்குள் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கு முன்னர் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின்போதும், மைதானத்துக்குள் திடீரென்று நுழைந்து சலசலப்பை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்துதான் இப்படியான செயலை ஜார்விஸ் நிறுத்த வேண்டும் என்று அஸ்வின் கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை