ஐபிஎல் 2023: டெல்லி அணியின் புதிய கேப்டன் யார்? சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ்!

Updated: Sat, Dec 31 2022 21:39 IST
Possible captaincy options for Delhi Capitals in IPL 2023 if Rishabh Pant misses out! (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த், நேற்று டெல்லியில் இருந்து டேராடூன் அருகேயுள்ள தனது சொந்த ஊருக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, சாலை விபத்திற்கு உள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

அங்கே ஆரம்பகட்ட சிகிச்சைகள் செய்து முடித்த பிறகு, டேராடூனில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு முழுமையாக ஸ்கேன் செய்து பார்த்ததில் பல இடங்களில் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பிசிசிஐ., ரிஷப் பந்திற்கு ஏற்பட்டிருக்கும் காயத்தை பட்டியலிட்டுள்ளது. அதில், நெற்றியில் இரண்டு வெட்டு காயங்களும் முட்டியில் கடுமையான காயங்களும் மற்றும் மணிக்கட்டு, பாதத்தில் சிராய்ப்புகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்கள், ரிஷப் பண்டிற்கு, முட்டியில் ஏற்பட்டிருக்கும் காயம் குணமாக மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகலாம் அல்லது அதற்கு மேலும் ஆகலாம் என தெரிவித்துள்ளதால் ரிஷப் பந்த் விளையாடுவதற்கு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும் என தெரிகிறது.

இதனால் எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் பங்கு கொள்ள மாட்டார் என்பதால், டெல்லி கேப்பிடல்ஸ் அணி தன்னுடைய அணியின் புதிய கேப்டனாக யாரை நியமிக்க போகிறது என்ற சிக்கலில் தள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய டெல்லி அணியில் சீனியர் வீரர்களாக டேவிட் வார்னர், பிரித்வி ஷா, மனீஷ் பாண்டே மற்றும் மிட்செல் மார்ஷ் போன்ற வீரர்கள் உள்ளதால், இவர்களில் ஒருவரை தான் டெல்லி அணி கேப்டனாக நியமிக்கும் என பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை