இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்றைய தினம் பல்லேகலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பதும் நிஷங்காவின் அபாரமான இரட்டை சதத்தின் மூலம், 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 381 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பதும் நிஷங்கா 20 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 210 ரன்களை விளாசினார். 

Advertisement

இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணியில் முகமது நபி, அஸ்மதுல்லா ஒமார்ஸாய் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் 50 ஓவரின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதன்மூலம் இலங்கை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

Advertisement

இப்போட்டியில் இரட்டை சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவிய பதும் நிஷங்கா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இப்போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையையும் படைத்தார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை வீரரின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராகவும் இது பாதிவானது. 

முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா கடந்த 2000ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் 189 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்நிலையில் அச்சாதனையை முறியடித்ததுடன், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தையும் விளாசி 210 ரன்களைச் சேர்த்து பதும் நிஷங்கா புதிய சாதனையை படைத்துள்ளார். 

 

இந்நிலையில் தனது சாதனையை முறியடித்த பதும் நிஷங்காவிற்கு முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், வாழ்த்துக்கள் பதும் நிஷங்கா. பேட்டிங்கில் நீங்கள் ஒரு மாஸ்டர்கிளாஸ் என்பதை நிரூபித்துள்ளீர்கள். இதனை நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இவரது பதிவு வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News