இங்கிலாந்து எதிரான ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அசாத்திய செயல்பாட்டை வெளிப்படுத்தி வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்தப் போட்டியில் 283 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு 23 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இடது கை இளம் பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்தரா 82 பந்துகளில் அதிரடி சதம் அடித்து அசத்தினார்.

Advertisement

இவர் ஆரம்பித்த விதம் இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை உடைப்பதாக அமைந்தது. கான்வே 152 ரன்கள் குவித்த போதும் இவருக்கே இதனால் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. அறிமுக உலகக் கோப்பை போட்டியில் சதம் அடித்ததோடு ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தியிருக்கிறார். மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் துவக்க வீரராக அனுப்பப்பட்ட இவர் அந்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு 97 ரன்கள் குவித்து மிரட்டினார். 

Advertisement

நேற்று கேன் வில்லியம்சன் விளையாட முடியாத காரணத்தினால் இவருக்கு மூன்றாவது இடத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பையும் மிக அழகாக கைப்பற்றி இருக்கிறார். இவரது தந்தை சென்னையில் லீக் போட்டிகளில் விளையாடியவர் என்கின்ற தகவல் கிடைக்கிறது. பிறகு இவர்கள் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்து, ரச்சின் ரவீந்தரா நியூசிலாந்துக்காக உள்நாட்டு போட்டிகளில் வெலிங்டன் அணிக்காக விளையாடி, நியூசிலாந்து தேசிய அணியில் தற்போது இடம் பிடித்து அசத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் அனில் கும்ப்ளே இவரைப் பற்றி கூறும் பொழுது “பாகிஸ்தானுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் அவர் பேட்டி துவங்கிய பொழுது அவர் எவ்வளவு திறமையானவர் என்பதை நாம் பார்த்தோம். ஆனால் உலக கோப்பையின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனுக்கு எதிராக அவர் விளையாடிய விதம் மிக அபாரமான ஒன்று. இது மிகச் சிறந்த இன்னிங்ஸ். இவரைப் பார்ப்பதற்கு நமது யுவராஜ் சிங்கை இளம் வயதில் பார்த்தது போலவே இருக்கிறது. இவர் மிகவும் நேர்த்தியானவர், அபாரமானவர்” என்று பாராட்டியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News