ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இந்நிலையில், பி -பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு – அஸாம் அணிகள் மோதிய ஆட்டம் கடந்த 17 ஆம் தேதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது. 

Advertisement

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பேட்டிங் செய்த தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் என் ஜெகதீசன் 125 ரன்களும், பிரதோஷ் பால் 153 ரன்களும், விஜய் சங்கர் 112 ரன்களும் எடுத்தனர். முதல் இன்னிங்சிஸ் முடிவில் தமிழ்நாடு அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 540 ரன்கள் எடுத்தது. அஸாம் அணி தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

Advertisement

தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய அஸாம் அணி முதல் இன்னிங்சில் 266 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக புர்காயஸ்தா 74 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு தரப்பில் எஸ் அஜித் ராம் 4 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியார் மற்றும் திரிலோக் நாக் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

இதன்மூலம் தமிழ்நாடு அணி 250 ரன்களுக்கு மேல் முன்னனிலையில் இருந்த நிலையில், ஆட்டத்தில் ஃபாலோ ஆன் அழைப்பை எடுத்தார் கேப்டன் சாய் கிஷோர். அதன்படி 2ஆவது இன்னிங்சில் களமாடிய அசாம் அணியில் எந்த வீரர்களும் நிலைத்து நின்று ஆடவில்லை. அரைசதம் அடித்த ரிஷவ் தாஸ் 58 ரன்கள் எடுத்து இருந்தார். அவரைத்தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

இதனால், தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தமிழ்நாடு அணியில் அஜித் ராம் 4 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். இதேபோல், கேப்டன் சாய் கிஷோர் மற்றும் பாபா அபராஜித் தலா 2 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியார் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த அசத்தல் வெற்றியின் மூலம் தமிழ்நாடு 15 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. அடுத்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி சவுராஷ்டிராவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் காலிறுதி வாய்ப்பு சந்தேகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News