ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25ஆவது சீசனுக்கான காலிறுதி போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில் புனேவில் உள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் கேரளா மற்றும் ஜம்மூ காஷ்மீர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜம்மு காஷ்மீர் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காமல் விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

பின்னர் மிடில் ஆர்டரில் கன்ஹையா வாத்வான் 48 ரன்களையும், நசிர் லோன் 44 ரன்களையும், சாஹில் லோத்ரா 35 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் ஜம்மு காஷ்மீர் அணி முதால் இன்னிங்ஸில் 280 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேரளா அணி தரப்பில் எம்டி நித்தீஷ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய கேரளா அணியில் சல்மான் நிஷார் சதமடித்து அசத்தினார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சல்மான் நிஷார் 12 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 112 ரன்களையும், ஜலஜ் சக்சேனா 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 67 ரன்களையும் சேர்த்தனர். இஇருப்பினும் கேரளா அணி முதல் இன்னிங்ஸில் 281 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. ஜம்மு காஷ்மீர் தரப்பில் அகிப் நபி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து ஒரு ரன் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்த ஜம்மு காஷ்மீர் அணியில் கேப்டன் பராஸ் தோக்ரா சதமடித்து அசத்தியதுடன் 132 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு துணையாக விளையாடி கன்ஹையா வாத்வான்ய 64 ரன்களையும், சாஹில் லோத்ரா 59 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 399 ரன்களை சேர்த்து டிக்ளர் செய்ததுடன், கேரளா அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயித்து. கேரளா தரப்பில் நிதீஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய கேரளா அணியில் ரோஹன் குன்னமால் 36 ரன்களையும், அக்‌ஷய் சந்த்ரன் 48 ரன்களையும் சேர்த்து வலுவான தொடக்கத்தைக் கொடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சச்சின் பேபி 48 ரன்னிலும், ஜலஜ் சக்சேனா 18 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த சல்மான் நிஷார் - முகமது அசாரூதின் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதில் அசாரூதின் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். மேற்கொண்டு இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் சலமான் நிஷார் 44 ரன்களையும், அசாரூதின் 67 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 5ஆம் நாள் ஆட்டநேர முடிவில் கேரளா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்களைச் சேர்த்தது. இதனால் இப்போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டதுடன், கேரளா அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற காரணத்தால் அடுத்து சுற்றுக்கு முன்னேறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News