இந்தியாவில் விறுவிறுப்பாக தொடங்கியுள்ள 2024 ரஞ்சிக் கோப்பை தொடரின் 5வது லீக் போட்டியில் அசாம் மற்றும் சத்தீஸ்கர் கிரிக்கெட் அணிகள் மோதின. ராய்ப்பூர் நகரில் தொடங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்ஸில் போராடி 327 ரன்கள் எடுத்தது.

Advertisement

அந்த அணிக்கு அதிகபட்சமாக அமன்தீப் காரே சதமடித்து 116 ரன்களும், ஷசாங் சிங் 82 ரன்களும் எடுத்த நிலையில் அசாம் சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் செங்குப்த்தா மற்றும் முக்தர் ஹுசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய அசாம் ஆரம்பம் முதலே சத்தீஸ்கர் பவுலர்களின் அதிரடியான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் பெற்றது.

Advertisement

அந்த அணிக்கு அதிகபட்சமாக டேனிஷ் தாஸ் 52 ரன்கள் எடுத்த நிலையில், சத்தீஸ்கர் சார்பில் அதிகபட்சமாக சௌரப் மஜும்தார் மற்றும் ரவி கிரண் விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 168 ரன்கள் பின் தங்கிய நிலைமையில் ஃபாலோ ஆன் பெற்று பேட்டிங் செய்த அசாம் அணிக்கு ரிசவ் தாஸ் 17, ராகுல் ஹசகிரா 39, கடிகோன்கர் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அந்த நிலைமையில் 4ஆவது இடத்தில் களமிறங்கிய கேப்டன் ரியான் பராக் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். அதே வேகத்தில் அதிரடியாக செயல்பட்ட அவர் வெறும் 56 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2ஆவது வீரர் என்ற அபாரமான சாதனையும் படைத்தார்.

இதற்கு முன்பாக கடந்த 2016 ரஞ்சிக்கோப்பையில் டெல்லி அணிக்காக ரிஷப் பந்த் 48 பந்துகளில் 50 ரன்கள் விளாசி அதிவேகமாக அரை சதமடித்த வீரராக சாதனை படைத்துள்ளார். அதே வேகத்தில் அட்டகாசமாக விளையாடிய ரியான் பராக் சதமடித்து 11 பவுண்டரி 12 சிக்ஸருடன் 155 ரன்களை 178.16 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அசாம் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்து அவுட்டானார்.

ஆனால் அவரை தவிர்த்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி அசாமை 254 ரன்களுக்கு மீண்டும் சுருட்டிய சத்தீஸ்கர் சார்பில் ஜிவேஷ் புட்டே, வாசுதேவ் பாரேத் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இறுதியில் 87 ரன்களை துரத்திய சத்தீஸ்கர் அணிக்கு ஏக்நாத் கேர்கர் 31, ரிசப் திவாரி 48 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News