பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கராச்சியில் கடந்த 12ஆம் தேதியில் இருந்து நேற்று வரை நடைபெற்றது. இந்த டெஸ்டில் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி 2ஆவது இன்னிங்சில் சதம் அடிக்க, போட்டி டிராவில் முடிந்தது.

Advertisement

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 556 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 148 ரன்னில் சுருண்டது. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 97 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. மொத்தமாக ஆஸ்திரேலியா 505 ரன்கள் முன்னிலை பெற்றதால் பாகிஸ்தானுக்கு 506 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எப்படியும் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என கிரிக்கெட் வல்லுனர்கள் எண்ணினர்.

Advertisement

பாகிஸ்தான் அணி 21 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. 3ஆவது விக்கெட்டுக்கு அப்துல்லா ஷஃபிக் உடன் கேப்டன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டது. குறிப்பாக பாபர் அசாம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 180 பந்துகளை எதிர்கொண்டு சதம் விளாசினார்.

இதனால் பாகிஸ்தான் 4ஆவது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அசாம் 102 ரன்களுடனும், ஷஃபிக் 71 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கடைசி நாளில் பாகிஸ்தான் அணிக்கு 314 ரன்கள் தேவைப்பட்டது. பாபர் அசாம் களத்தில் இருந்ததால் எப்படியும் இலக்கை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இப்போட்டி டிராவில் முடிந்தது.

4ஆவது நாளில் தலைசிறந்த அணியின் பந்து வீச்சை எதிர்த்து சதம் விளாசி பாபர் அசாமின் ஆட்டத்தை அனைவரும் பாராட்டினர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின்,  பாபர் அசாமை  கைத்தட்டி பாராட்டுவது போன்ற எமோஜியை வெளியிட்டு, நாளை ஒரு அற்புதமான முடிவாக இருக்கும் எனத் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பரம எதிரியாக இருந்தாலும் அஸ்வின் பாராட்டு தெரிவித்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

Advertisement

இந்த நிலையில், பாபர் அசாமை பாராட்டிய அஸ்வினை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் லத்தீப் புகழ்ந்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “அஸ்வின் அவரது மனதில் உள்ளவை அப்படியே வெளிப்படுத்துவார் எனத் தெரிவித்துள்ளார். மேலும், எதிரணியை பாராட்டும்போது அஸ்வின் முன்னணியில் இருக்கிறார்.

இன்சமாம் உல் ஹக் உடன் பேட்டி அல்லது பாபர் அசாமை பாராட்டியதில் அஸ்வின் முன்னணியில் இருக்கிறார். அஜய் ஜடேஜா உடன் நாங்கள் சிறந்த நட்புணர்வை பகிர்ந்துள்ளோம். அதுபோன்ற சிறந்த உரையாடல் தற்போது இல்லை’’ என்று தெரிவித்தார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News