உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 15 நாட்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 276 ரன்கல் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் பின் களமிறங்கிய இந்திய அணி ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் அபார அரைசதத்தை அபார வெற்றியை பதிவு செய்தது.

Advertisement

மேலும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவின் ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றிருந்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். அதன் பிறகு கிட்டத்தட்ட 21 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவின் ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அவர் பத்துபவர்களில் 47 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். இந்த மாத தொடக்கத்தில் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ தேர்வு குழு வெளியிட்டது. இந்தப் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயர் இடம்பெறவில்லை. மேலும் ஆசியக் கோப்பை போட்டியின் போது வங்கதேசம் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்ஸர் படேல் அந்தப் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆசியக் கோப்பையின் இறுதி போட்டியில் பங்கேற்கவில்லை. 

மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் அவரது பெயர் அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை அவர் காயம் காரணமாக உலகக் கோப்பையில் இடம்பெற தவறினால் அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்படலாம் என்று ஒரு கருத்து நிலவி வந்தது. ஆசிய கோப்பையின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் தொலைபேசியில் பேசி வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட அஸ்வின் இன்று முதல் போட்டியிலும் விளையாடி இருக்கிறார்.

 

Advertisement

மேலும் இந்தப் போட்டி முடிந்த உடனே அடுத்த சில நிமிடங்களில் அஸ்வின் பேட்டிங் பயிற்சி செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருக்கிறது. அஸ்வின் தீவிரமாக பயிற்சிகளில் ஈடுபடுவதை பார்க்கும் போது உலகக்கோப்பை அணியில் அவர் இடம்பெறலாம் என்ற ஒரு நம்பிக்கையும் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது. அக்ஸர் பட்டேல் காயம் தீவிரமாக இருந்து மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியிலும் அவரிடம் பெறவில்லை என்றால் ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவது உறுதியாகிவிடும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News