ஐபிஎல் தொடரில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டு நடக்கவுள்ள 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் கூடுதலாக ஆடுவதாக இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் ஆடவுள்ளன. இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளதால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தது.

Advertisement

இந்நிலையில், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரும், ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான டிவில்லியர்ஸ் ஐபிஎல்லிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த அதிரடி வீரர்களில் ஒருவர் டிவில்லியர்ஸ். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிட வல்லவர் என்பதால் மிஸ்டர் 360 என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட டிவில்லியர்ஸ், 2019 உலக கோப்பைக்கு தென் ஆப்பிரிக்கா தீவிரமாக தயாராகிவந்த நிலையில், அதற்கு முன்பாக திடீரென ஓய்வு அறிவித்தார்.

Advertisement

2018இல் டிவில்லியர்ஸின் சர்வதேச கிரிக்கெட் ஓய்வு அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. அதேபோலவே ஐபிஎல்லிலும் திடீரென ஓய்வு அறிவித்து அதிர்ச்சியளித்தார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை 184 போட்டிகளில் விளையாடி 5,162 ரன்களை குவித்துள்ளார் டிவில்லியர்ஸ். ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டிலிருந்து 2010 வரை 3 சீசன்கள் டெல்லி அணியில் ஆடிய டிவில்லியர்ஸ், 201ஆம் ஆண்டிலிருந்து 2021 வரை 11 சீசன்கள் ஆர்சிபி அணிக்காக விளையாடிமார்.

ஐபிஎல்லின்  வெற்றிகரமான மற்றும் ஆதிக்கம் செலுத்திய வீரர்களில் ஒருவரான டிவில்லியர்ஸ், ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், தென் ஆப்பிரிக்கா அணிக்காகவும், ஆர்சிபி அணிக்காகவும் தான் செய்ய வேண்டிய பணி இன்னும் உள்ளது என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.

அவர் ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில், இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “சஞ்சய் பங்கார் தான் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர். ஆனால் டிவில்லியர்ஸ் ஆலோசகர் அல்லது பேட்டிங் பயிற்சியாளர் ஆகிய ஏதேனும் ஒரு பொறுப்பில் நியமிக்கப்படலாம். எப்படியோ, ஏதாவது ஒரு பொறுப்புடன் ஆர்சிபி டக் அவுட்டில் டிவில்லியர்ஸ் இருப்பார். டிவில்லியர்ஸை பயிற்சியாளர் பொறுப்பிற்கு ஆர்சிபி அணி ஏற்கனவே கண்டிப்பாக அணுகியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News