இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸி சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவுள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்திற்கான அறிவிப்பில் முதலில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு அணிகளுக்கும் ரோஹித் சர்மா தொடர்ந்து கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

Advertisement

இந்த நிலையில் புதிய தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் பதவி ஏற்கும் வரையில் காத்திருந்து தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 இந்திய அணி நேற்று இரவு திடீரென்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வருமா முகேஷ் குமார் மூவருக்கும் முதல் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. 

Advertisement

முகேஷ் குமார் இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் தனது முதல் வாய்ப்பை பெற்றிருந்தார். இந்த நிலையில் டி20 தொடரில் இந்திய அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பினிஷிங் ரோலில் பேட்டிங்கில் வந்து மிக அபாரமாக செயல்பட்ட இளம் இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

ரிங்கு சிங் ஆட்டம் ஒரு இளம் வீரரின் ஆட்டம் போல் இல்லாமல் ஒரு தேர்ந்த அனுபவ வீரரின் ஆட்டம் போல் இறுதி கட்டத்தில் இருந்தது. கடைசி ஓவரில் 30க்கும் மேற்பட்ட ரன்கள் தேவைப்பட்ட பொழுது கூட அவர் எங்குமே பதட்டம் அடையவில்லை. மிக அமைதியாக காத்திருந்து ஒவ்வொரு பந்தையாக சிக்ஸருக்கு அனுப்பி தொடர்ந்து ஐந்து சிக்ஸர்கள் அடித்து அணியை வெல்ல வைத்தார்.

மேலும் அவருடைய பேட்டிங் என்பது டி20 கிரிக்கெட் ஏற்றதாக மட்டும் அல்லாமல், மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்குமே ஏற்றதாகவே தெரிகிறது. அவருடைய உள்நாட்டு செயல்பாட்டு புள்ளி விபரங்கள் அவருடைய மிகச்சிறப்பான பேட்டிங் திறமையை வெளிக்காட்டுகிறது.

இப்படி இருந்தும் இவருக்கு வாய்ப்பு தரப்படாதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது. மிகக் குறிப்பாக இவரது வளர்ச்சியை மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும், தற்போதைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு மிகவும் வருத்தத்தை உண்டாக்கி இருக்கிறது.

Advertisement

 

இதேநேரத்தில் கேப்டன் நிதிஷ் ராணா ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாததற்கு அவரது பெயரை குறிப்பிட்டு ட்விட்டரில், “கடினமான நாட்களே சிறந்ததை உருவாக்கும்” என்று கூறி ஆறுதல்படுத்தி இருக்கிறார். ஆனாலும் இதுவரையில் ரிங்கு சிங் தரப்பில் இருந்து எந்த செய்தியும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News