ரோஹித் சர்மா அணியில் கண்டிப்பாக இவருக்கு இடமுண்டு - பிரக்யான் ஓஜா!

Updated: Thu, Jul 28 2022 22:28 IST
Image Source: Google

இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது மும்முரமாக தயாராகி வரும் வேளையில் இந்திய அணியும் தங்களது வலுவான அணியை தற்போது கட்டமைத்து வருகிறது. அந்த வகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து பலமான அணியாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

இந்த டி20 உலககோப்பை தொடரை தொடர்ந்து இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பையும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் தற்போது இந்திய அணி வீரர்களின் தேர்வில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறது.

இந்நிலையில் அடுத்த ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணியின் அனுபவ துவக்க வீரரான ஷிகார் தவானை அணியில் இடம்பெறச் செய்ய ரோஹித் சர்மா அதிகம் விரும்புவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான பிரக்யான் ஓஜா கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் மற்றும் தவான் ஆகியோரது ஜோடி கடந்த 9 ஆண்டுகளாக இந்திய அணிக்காக சிறப்பான துவக்கத்தை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுமட்டும் இன்றி தற்போது ரோஹித் இல்லாத நேரத்தில் தவான் தலைமையில் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது.

இதன் காரணமாக தவான் ஒருநாள் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே என்னை பொறுத்தவரை ஒருநாள் போட்டிகளுக்கான உலக கோப்பையின் போது ரோகித் சர்மாவின் முதன்மை துவக்க வீரருக்கான தேர்வாக தவான் தான் இருப்பார் என்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி வேறு மாதிரி இருந்தாலும் நிச்சயம் ஒருநாள் போட்டிகளுக்கான முதன்மை துவக்க வீரராக தவான் தான் இருப்பார்” என்றும் கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை