அணி வீரர்கள் போராடிய விதம் பாராட்டத்தக்கது - சூர்யகுமார் யாதவ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செப்பாக்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கெல்டன் உள்ளிட்டோர் சோற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். பின்னர் சூர்யகுமார் யாதவ் 29 ரன்களுக்கும், தீலக் வர்மா 31 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 155 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து 155 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 22 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 53 ரன்களி விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ரச்சின் ரவீந்திரா 65 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சிஎஸ்கே அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், “இந்த போட்டியில் நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம். ஆனால் இப்போட்டியில் எங்கள் அணி வீரர்கள் போராடிய விதம் பாராட்டத்தக்கது. இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதில் மும்பை இந்தியன்ஸ் அணி பாராட்டுக்குரியது. மேலும் அவர்கள் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக இதனை செய்து வருகின்றனர். அவர்களின் இந்த செயல்முறையானது ஆச்சரியமாக இருக்கிறது.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் இப்போட்டியில் நாங்கள் ரன்களை கொடுத்த காரணத்தால் விக்னேஷ் புதூரின் ஒரு ஓவரை தக்கவைக்க வேண்டும் என்று முடிவுசெய்திருந்தேன். ஆனால் அவருக்கு 18ஆவது ஓவரைக் கொடுப்பது ஒரு தவிர்க்க முடியாத செயலாக மாறியது. இரண்டாவது இன்னிங்ஸில் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செய்த விதம் இந்த அட்டத்தை எங்களிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டது. இத்தொடரில் இன்னும் நிறைய போட்டிகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.