தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், டேவிட் மாலன், பென் டக்கெட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹாரி ப்ரூக் - கேப்டன் ஜோஸ் பட்லர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Advertisement

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 73 ரன்களை பார்ட்னர்ஷிப் முணையிலும் அமைத்தனர். அதன்பின் சதமடிபார் என எதிர்பார்க்கப்பட்ட ஹார் ப்ரூக் 4 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 80 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதன்பின் பட்லருடன் இணைந்த மொயீன் அலியும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 250    ரன்களைத் தாண்டியது. பின் 51 ரன்களில் மொயீன் அலியும், 14 ரன்களில் கிறிஸ் வோக்ஸும், 28 ரன்களிலும் சாம் காரணும் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதில் இறுதிவரை களத்தில் இருந்த ஜோஸ் பட்லர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 சிக்சர், 8 பவுண்டரிகள் என 94 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி குயின்டன் டி காக் - கேப்டன் டெம்பா பவுமா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் டி காக் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஸ்ஸி வெண்டர் டுசென் 38 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த டெம்பா பவுமா அபாரமாக விளையாடி சதமடித்து அசத்தினார். இது அவரது மூன்றாவது சர்வதேச ஒருநாள் சதமாகும். அதன்பின் அதிரடியாக விளையாடிய பவுமா 14 பவுண்டரி, ஒரு சிக்சர் என 109 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஹென்ரிச் கிளாசெனும் 27 ரன்களோடு வெளியேறினார்.

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் - டேவிட் மில்லர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து, ஒரு ரன்னில் அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இருப்பினும் மறுமுனையில் டேவிட் மில்லர் அரைசதம் கடந்துடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரிகள் 58 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு துணையாக விளையாடிய மார்கோ ஜான்சென் 32 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவரில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News