தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

Advertisement

ஹனுமா விஹாரிக்குப் பதிலாக விராட் கோலியும் சிராஜுக்குப் பதிலாக உமேஷ் யாதவும் இந்திய அணியில் இடம்பிடித்தார்கள். தெ.ஆ. அணியில் மாற்றம் எதுவுமில்லை. 

Advertisement

பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இதனால் 12 ரன்களில் ஆலிவியரிடம் கே.எல். ராகுலும் 15 ரன்களில் ரபாடாவிடம் மயங்க் அகர்வாலும் வீழ்ந்தார்கள். இதன்பிறகு புஜாராவும் கோலியும் பொறுப்புடன் விளையாடினார்கள். புஜாரா 4 பவுண்டரிகள் அடித்து சுறுசுறுப்பாக இயங்கினார்.

தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சு துல்லியமாக இருந்தாலும் கோலியும் புஜாராவும் கவனமாக விளையாடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்கள். 3ஆவது விக்கெட்டுக்கு இருவரும் 132 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்கள். 77 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்த புஜாரா, ஜான்சன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 
நன்கு விளையாடிய புஜாரா அரை சதமாவது எடுப்பார் என ரசிகர்கள் எண்ணிய நிலையில் அவர் ஏமாற்றம் அளித்துள்ளார். அதன்பின் களமிறங்கிய அஜிங்கியா ரஹானே 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடாவிடம் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி - ரிஷப் பந்த் இணை பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறுக சிறுக ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.

இதனால் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்துள்ளது. விராட் கோலி 40 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 

Advertisement

தென் ஆப்பிரிக்க தரப்பில் காகிசோ ரபாடா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 

இந்திய அணி 39 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 19, ரஹானே 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News