தென் ஆப்பிரிக்காவின் ஃபிரான்சைஸ் டி20 தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் கோலாகலமாக இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் ஐடன் மாக்ரம் தலைமையிலான நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், ரஷித் கான் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரீஸா ஹென்றிக்ஸ் மற்றும் ரஸ்ஸி வென்டர் டுசென் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரீஸா ஹென்றிக்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் வென்டர் டுசெனுடன் இணைந்த கானர் எஸ்டெர்ஹூய்சென் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இதில் கானர் எஸ்டெர்ஹூய்சென் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ரஸ்ஸி வென்டர் டூசெனும் 16 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த காலின் இங்க்ரம் மற்றும் டெவால்ட் பிரீவிஸ் இணை சிறப்பாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் அபாரமாக விளையாடிய டெவால்ட் பிரீவிஸ் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். அதேசமயம் மறுமுனையில் 22 ரன்களை எடுத்த கையோடு காலின் இங்க்ரம் விக்கெட்டை இழக்க, தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பிரீவிஸ் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 56 ரன்களில் பிரீவிஸின் விக்கெட்டை மார்கோ ஜான்சன் கைப்பற்றினார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் மற்றும் கேப்டன் ரஷித் கான் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் இறுதியில் அதிரடியான அட்டத்தை வெளிப்படுத்திய ஜார்ஜ் லிண்டே 23 ரன்களையும், டெலானோ போட்ஜிட்டர் 25 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் மார்கோ ஜான்சன், ரிச்சர்ட் கிளீசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News