ஆஃப்கானிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி 8 புள்ளிகளுடன், இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெறும் நோக்கில் உள்ளது. ஆனால், அந்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என்ற வலுவான இரண்டு அணிகளை சந்திக்க உள்ளது. 

Advertisement

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட உள்ள நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணி அதற்கான திட்டமிடலில் இருந்த போது அந்த அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா, அதிரடியாக சச்சின் டெண்டுல்கரை அழைத்து வந்தார். ஆஃப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையே ஆன போட்டி மும்பையில் நடைபெறுவதால் இந்த சந்திப்பு எளிதாக அமைந்தது. 

Advertisement

அஜய் ஜடேஜா, சச்சினுடன் ஒரே அணியில் ஆடியவர், அவரின் நண்பர் என்பதாலும், ஆப்கானிஸ்தான் அணியின் மீது இருக்கும் அன்பாலும் சச்சின் ஆப்கானிஸ்தான் வீரர்களை சந்திக்க நேரில் சென்றார். இதில் ஒரு முக்கிய விஷயம் உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி தற்போது திறமையாக ஆடி வருகிறது. அணியில் அனைத்து வீரர்களும் வெற்றிக்காக தங்கள் பங்கை அளித்து ஆடுகின்றனர். ஆனால், ஆஸ்திரேலியா என்ற பலமான அணியை தங்களால் வீழ்த்த முடியும் என ஆப்கானிஸ்தான் வீரர்கள் மனதளவில் நம்ப வேண்டும். அதற்கு பெரிய ஊக்கம் வேண்டும்.

இந்த நிலையில் தான் கிரிக்கெட் உலகின் மாபெரும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை அழைத்து வந்தார் அஜய் ஜடேஜா. வீரர்களின் வலைப் பயிற்சிக்கு நடுவே நடந்த இந்த சந்திப்பில் சச்சின், சில ஆப்கானிஸ்தான் வீரர்களை தனியாக அழைத்து ஆலோசனைகளை வழங்கினார். பேட்டிங்கில் சில நுணுக்கங்களை பற்றி கூறினார். 

அவரது ஆலோசனைகள் மற்றும் ஊக்கம் அளிக்கும் வார்த்தைகள் நிச்சயம் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை அளித்து இருக்கும். அது மட்டுமின்றி, பயிற்சியாளர் ஜொனாதன் டிராட், அஜய் ஜடேஜா, சச்சின் டெண்டுல்கர் நீண்ட நேரம் உரையாடலில் ஈடுபட்டனர். நிச்சயம் அப்போது ஆஸ்திரேலியா அணியை வீழ்த்துவது குறித்து பேசப்பட்டு இருக்கும். 

Advertisement

சச்சின் டெண்டுல்கர் கூறிய சில ஆலோசனைகளை நிச்சயம் ஆப்கானிஸ்தான் அணி எடுத்துக் கொள்ளும் என நம்பலாம். ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்த முதல் கட்டமாக போட்டிக்கு முன்பே சச்சின் டெண்டுல்கரின் ஊக்கத்தையும், ஆலோசனைகளையும் பெற்றுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News