இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன். தனது அதிரடியான ஆட்டத்திற்கு பெயர் போன இவர், தொடர்ச்சியாக ரன்களை சேர்க்க தவறியதால் இந்திய அணியில் உள்ளே, வெளியே என அணியில் தனது இடத்தை தக்கவைக்க முடியாமல் தவித்து வந்தார். ஆனால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார். 

Advertisement

இருப்பினும் அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஜிம்பாப்வே, இலங்கை தொடர்களிலும் அவரால் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியவில்லை. பின், ரோஹித் சர்மாவின் ஓய்வு காரணமாக வங்கதேச டி20 தொடரில் அணியின் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட்டார். அத்தொடரின் கடைசி போட்டியில் சதமடித்து தனது இடத்தை ஓரளவு உறுதிசெய்தார். 

Advertisement

அதன்பின் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க தொடரிலும் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் அத்தொடரில் இரண்டு சதங்களை விளாசி தனது இடத்தை நிலை நிறுத்திக்கொண்டுள்ளார். இதன்மூலம் இந்திய டி20 அணியின் தொடக்க வீரர் இடத்தையும் அவர் ஏறத்தாழ உறுதிசெய்துள்ளார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் உடன் யூடியுப் நேரலையில் பங்கேற்றார்.

அதில் பேசிய சஞ்சு சாம்சன, சர்வதேச கிரிக்கெட்டில் தனது சமீபத்திய வெற்றிக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் ஆதரவு தான் காரணம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணிக்குள் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக் வந்ததும், டிரஸ்ஸிங் ரூமில் அவர் என்னிடம் 'சஞ்சு, உன்னிடம் என்ன இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். உங்களிடம் ஏதோ சிறப்பு இருக்கிறது. எதுவாக இருந்தாலும் நான் உங்களிடம் திரும்பி வருவேன் என்று கூறினார். 

மேலும் அவர் என்னிடம் உள்ளே சென்று உங்களை வெளிப்படுத்தவும் என்று கூறினார். ஒரு பயிற்சியாளரிடமிருந்து அந்த வகையான உத்வேகம் உங்களுக்கு கிடைக்கும் போது அது எனக்கு நம்பிக்கை கொடுத்தது. மேலும் சில ஆட்டங்களில் நான் ரன்களை சேர்க்க தவறிய நிலையில், எனக்கு மாற்றாக பல வீரர்கள் பின்னால் இருபதால் என் மீது அதிக அழுத்தம் இருந்தது. அதனால் நான் எனக்குள், உன்னாள் முடியும் சஞ்சு, பயிற்சியாளர் உன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தேன். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

கடவுள் அருளால், ஒரு விசேஷம் நடந்தது. நான் நினைத்தது நடந்தது. எனது நாட்டிற்காக தொடர்ந்து ரன்களை குவித்து வெற்றி பெற விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் இதுவரை 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 3 அரைசதங்கள் என 510 ரன்களையும், 37 டி20 போட்டிகளில் 3 சதம் மற்றும் 2 அரைசதங்கள் என 810 ரன்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News