இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை முழுமையாக இந்தியாவில் வைத்து இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான முழு அட்டவணை சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இறுதிப் போட்டியில் வெளியேறிய நியூசிலாந்து அணிகள் அக்டோபர் 5ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதுவதோடு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்கிறது. 

Advertisement

இதே மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற்று உலகக் கோப்பை தொடர் முடிவடைகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் எட்டாம் தேதி ஆஸ்திரேலியா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது. இதற்கு அடுத்து அக்டோபர் 11ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

Advertisement

இதற்கடுத்து இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற போட்டியான இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. தற்பொழுது இந்தப் போட்டிக்குதான் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் அணியுடன் சென்னையிலும், ஆஸ்திரேலியா அணியுடன் பெங்களூரிலும், இந்திய அணி உடன் குஜராத் அகமதாபாத் மைதானத்திலும் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. 

ஆனால் ஐசிசி அதற்கெல்லாம் சம்மதிக்காமல் அட்டவணையை தயாரித்தது போல வெளியிட்டது. இந்த நிலையில்தான் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்ததற்கு சாதகமாக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதில் சிக்கல் உருவாகி இருக்கிறது. போட்டி நடைபெறும் அக்டோபர் 15 ஆம் தேதி நவராத்திரி விழா துவங்குகிறது. அன்றைய நாள் இரவு முழுவதும் கர்பா நடனத்துடன் குஜராத் மக்கள் நவராத்திரியை கொண்டாடுவார்கள். இதுதான் தற்பொழுது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

குஜராத்தின் மிகப்பெரிய திருவிழாவான நவராத்திரியின் முதல் நாளின்போது போட்டி நடைபெற்றால் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று ஏஜென்சிகள் தெரிவித்து இருக்கின்றன. மேலும் அன்றைய நாளில் மருத்துவமனை ஹோட்டல்கள் என்று எல்லா வசதிகளையும் பார்த்தாக வேண்டும். ஏனென்றால் இதற்காக வெளிநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் கூடுவார்கள். அவர்களுக்கான எல்லா வசதிகளையும் செய்து தந்தாக வேண்டும்.

தற்பொழுது இது குறித்து முடிவெடுக்க ஜூலை 27 ஆம் தேதி டெல்லியில் போட்டியை நடத்தும் அனைத்து ஹோஸ்டிங் இடங்களின் உறுப்பினர்களும் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். இது சம்பந்தமாக பேசுவதற்கும், குறிப்புகளை பரிமாறிக் கொள்வதற்கும், பிரச்சனையை கருத்தில் கொள்வதற்கும், அனைவரின் நலனுக்காகவும், அனைத்து உறுப்பினர்களும் ஒன்று கூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News