இந்திய டி20 அணியில் வாய்ப்பு பெற்ற ரமந்தீப், வைஷாக் விஜயகுமார், யாஷ் தயாள்!

Updated: Sat, Oct 26 2024 12:29 IST
Image Source: Google

இந்திய அணி தற்சமயம் நியூசிலாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும், அதன்பின் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. 

அந்தவகையில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி நவம்பர் 08ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முடிவடையவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி டர்பனிலும், இர்னடாவது போட்டி க்கெபெர்ஹாவிலும், மூன்றாவது போட்டி செஞ்சூரியனிலும், நான்காவது போட்டி ஜொஹன்னஸ்பர்க்கிலும் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதன்படி இத்தொடருக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்களான ரமந்தீப் சிங், வைஷாக் விஜயகுமார், யாஷ் தயாள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆவேஷ் கான், அக்ஸர் படேல் உள்ளிட்டோரும் இந்திய டி20 அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். மேற்கொண்டு டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள காரணத்தால் வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. இதுதவிர்த்து காயம் காரணமாக ஷிவம் தூபே, மயங்க் யாதவ், ரியான் பராக் மற்றும் குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கும் இடம் கிடைக்கவில்லை. 

இதன் காரணமாகவே ரமந்தீப் சிங், வைஷாக் விஜயகுமார் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் ரமந்தீப் சிங் சமீபத்தில் நடைபெற்ற எமெஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் அபாரமான செயல்பட்டை வெளிப்படுத்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேற்கொண்டு ஆஃப்கானுக்கு எதிரான் அரையிறுதிலும் அரைசதம் கடந்து இறுதிவரை போராடியுள்ளார். 

தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வரும் ரமந்தீப் சிங் முதல் முறையாக இந்திய டி20 அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதேசமயம், ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் காரணமாக வைஷாக் விஜயகுமாரும் இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்களுடன் வங்கதேச டெஸ்ட் தொடரில் இடம்பிடித்தும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த யாஷ் தயாளிற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேற்கொண்டு தாற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியிலும் கூடுதல் தொடக்க வீரர்கள் என யாரும் சேர்க்கப்படாத காரணத்தால் அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சனே தொடக்க வீரராக களமிறங்குவார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கே), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ராமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான், யாஷ் தயாள்.

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை