இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2005ஆம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்பின் தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானுடன் அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னார் இஸ்லமாபாத் வந்தடைந்தனர்.

Advertisement

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 1 ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. 2ஆவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 9 ஆம் தேதி முல்தானிலும், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி கராச்சியிலும் நடைபெற உள்ளது.  

Advertisement

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளே மோதின. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கடந்த உலகக் கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தது. நியூசிலாந்து தனது ஒரு நாள் தொடரை போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ரத்து செய்துவிட்டு பாகிஸ்தானில் விளையாடாமல் தாயகம் திரும்பியது. இதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. 

இங்கிலாந்தின் இந்த டெஸ்ட் தொடருக்கான சுற்றுப் பயணத்திற்கு முன்பும் இங்கிலாந்து அணியின் பாதுகாப்பு குறித்து கருத்தில் கொள்ளப்பட்டது. அதற்கு காரணம் அண்மையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட தூப்பாக்கிச் சூடு தாக்குதலே ஆகும்.

இதற்கிடையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான தனது போராட்டம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணிக்கு எந்த ஒரு பாதிப்பும் அளிக்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜாவிடம் உறுதியளித்தார்.

Advertisement

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணியின் இந்த பாகிஸ்தான் சுற்றுப்பயணம் முக்கியமானதாகப் பார்க்க்கப்படுகிறது. டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் 5ஆவது இடத்திலும், இங்கிலாந்து 7ஆவது இடத்திலும் உள்ளது. இந்தத் தொடருக்குப் பிறகு அதில் மாற்றம் ஏற்படலாம்.

இந்நிலையில் இரு அணிக்களுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உள்பட 14 வீரர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நாளைய போட்டியில் சிலர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்த அணியில் ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஸாக் கிரௌலி, கெடன் ஜென்னிங்ஸ், ஒல்லி போப் ஆகியோர் மட்டுமே நாளைய போட்டிக்கு தயாராக உள்ளதால், இப்போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News