முதல் ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாஹின் அஃப்ரிடி; வைரல் காணொளி!

Updated: Sat, Jul 01 2023 10:34 IST
Shaheen Afridi becomes the first ever bowler to take 4 wickets in the first over of a T20 match! (Image Source: Google)

இந்தியாவில் வெற்றிகரமாக நடந்து வரும் ஐபிஎல் டி20 லீக்குக்கு முன்னோடி 2003 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தால் நடத்தப்பட்டு வரும் டி20 லீக் டி20 பிளாஸ்ட் தான். இந்தத் தொடரில் மொத்தம் 18 அணிகள் கலந்து கொள்கின்றன. இது இங்கிலாந்தில் நடத்தப்படும் மிகப்பெரிய டி20 லீக் ஆகும். இதன் காரணமாகவே இங்கிலாந்து அடுத்து நடத்துவதை நூறு பந்துகள் போட்டியாக நடத்துகின்றது.

நேற்று வார்விக்‌ஷையர் அணிக்கு எதிராக நாட்டிங்ஹாம்ஷையர் அணி விளையாடிய போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இரண்டாவதாக பந்து வீசிய நாட்டிங்ஸையர் அணியின் பந்துவீச்சாளர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஷாஹின் ஷா அஃப்ரிடி முதல் ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தினார்.

எதிரணியின் கேப்டன் அலெக்ஸ் டேவிஸ்க்கு தனது வழக்கமான யார்க்கரை அனுப்பி காலி செய்தார். அடுத்து வந்த கிரீஸ் பெஞ்சமினை கிளீன் போல்ட் செய்தார். இதற்கடுத்த இரண்டு பந்துகள் ஒருரன் போனது. டான் மவுஸ்லி விக்கட்டை ஷார்ட் கவரில் கேட்ச் வைத்து எடுத்தார். கடைசிப் பந்தில் எட் பர்னாட்டுக்கு மீண்டும் ஒரு அற்புதமான யார்க்கரை வீசி காலி செய்தார். 

மழை குறுக்கிட்ட இந்த ஆட்டத்தில் ஷாகின் ஷா அஃப்ரிடி முதல் ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் வார்விக்‌ஷையர் அணியே இறுதியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழையின் காரணமாக பந்தை சரியாக பிடிக்க முடியாததால் நிறைய எக்ஸ்ட்ரா வீசி அந்த அணி தோல்வியை சந்தித்தது.

ஆட்டத்தில் தோல்விக்கு பின் பேசிய ஷாகின் ஷா அஃப்ரிடி ” நாங்கள் வெற்றி பெற தகுதியானவர்கள். ஆனால் அவர்கள் மழைக்கு பின்பாக நன்றாக விளையாடினார்கள். முதல் ஓவரில் நான்கு விக்கட்டுகளை வீழ்த்துவது எனக்கு இதுவே முதல் முறை. இது நன்றாக இருந்தது. நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். துரதிஷ்டவசமாக நாங்கள் தோற்றோம்.

 

கூட்டத்தினர் என்னை ஆதரிப்பது, நான் பந்து வீச ஓடும்பொழுது பாகிஸ்தானில் இருப்பது போலவே உணர்ந்தேன். எனது சக வீரர்களுடன் நல்ல நேரத்தை செலவிட்டேன். இந்த அணி ஒரு குடும்பம் போன்றது. மழையால் ஆட்டம் தாமதப்பட்டது. அது ஆட்டத்தை மாற்றியது. எங்களால் பந்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் இதுதான் கிரிக்கெட். நம்மால் வானிலையை கட்டுப்படுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை