உள்ளூர் தொடருக்காக பிஎஸ்எல் தொடரை உதறிய ஷகிப்!

Updated: Wed, May 12 2021 22:06 IST
Image Source: Google

வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன். கடந்தாண்டு சூதாட்ட புரோக்கர்கள் அணுகியதை சரியாக ஐசிசியிடம் தெரிவிக்காத வங்கதேச ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது. 

இந்தத் தடைக்காலம் முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும், ஐபிஎல் தொடரிலும் இவர் பங்கேற்றிருந்தார். 

மேலும், பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் லாகூர் கலந்தர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிஎஸ்எல் தொடர் பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் வங்கதேசத்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான தாக்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்காக ஷகிப் அல் ஹசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தொடரில் விளையாடும் பட்சத்தில் இவரால் பிஎஸ்எல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாட முடியாதது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை