பவுண்டரி லைனில் அபாரமாக கேட்ச் பிடித்து அசத்திய ஷர்தூல் தாக்கூர்; வைரல் காணொளி! 

Updated: Wed, Oct 11 2023 16:02 IST
பவுண்டரி லைனில் அபாரமாக கேட்ச் பிடித்து அசத்திய ஷர்தூல் தாக்கூர்; வைரல் காணொளி!  (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 9ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டு ஷர்தூல் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது விவாதமானது. இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 22 ரன்களை எடுத்திருந்த இப்ராஹிம் ஸத்ரான் ஜஸ்ப்ரித் பும்ராவிடம் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் ஆஃப்கானிஸ்தான் அணியின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ், ஹர்திக் பாண்டியாவின் ஓவரில் வீசப்பட்ட பவுன்சரை சிக்சர் அடிக்க முயற்சித்தார். அப்போது பவுண்டரி எல்லையில் நின்றிருந்த ஷர்தூல் தாக்கூர் பந்தை சரியாக கணித்து அதனை சிக்சருக்கு செல்லவிடாமல் கேட்ச் பிடித்து அசத்தினார். இதனால் ரஹ்மனுல்லா குர்பாஸ் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இதைத்தொடர்ந்து மற்றொரு நட்சத்திர வீரரான ரஹ்மத் ஷா 16 ரன்களை எடுத்த நிலையில் ஷர்தூல் தாக்கூர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 63 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தனர். இந்நிலையில் ஷர்தூல் தாக்கூர் கேட்ச் பிடித்து அசத்திய காணொளி இணையத்தில் வைரலாகிவருகிறது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை