புஜாராவுக்கு அட்வைஸ் வழங்கிய ஷிகர் தவான்!

Updated: Thu, Sep 28 2023 13:14 IST
புஜாராவுக்கு அட்வைஸ் வழங்கிய ஷிகர் தவான்! (Image Source: Google)

இந்திய அணியின் நட்சத்திர வீரர் செட்டேஸ்வர் புஜாரா தற்போது மீண்டும் வாய்ப்பு பெறுவதற்காக போராடி வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி மிகவும் மெதுவாக விளையாடும் பேட்டிங்கை வெளிப்படுத்திய அவருக்கு, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட ராகுல் டிராவிட் இடத்தை நிரப்பும் அளவுக்கு பொறுமையின் சிகரமாக விளையாடிய அவர் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வந்தார்.

குறிப்பாக 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த அவர் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைப்பதற்கு தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார். இருப்பினும் அதன் பின் ஃபார்மை இழந்து தடுமாறியதால் கடந்த 2022 பிப்ரவரில் நேரடியாக நீக்கப்பட்ட அவர் இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் விளையாடி மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

அந்த வாய்ப்பில் வங்கதேசம் மண்ணில் சதமடித்த அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்விக்கு காரணமாக அமைந்ததால் மீண்டும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து மீண்டும் இங்கிலாந்தின் கவுண்டி தொடங்கில் சசக்ஸ் அணிக்காக விளையாடிய அவர் தற்போது அதை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியுள்ளார்.

குறிப்பாக தம்முடைய சொந்த ஊரான ராஜ்கோட் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க ரோஹித் சர்மா, பும்ரா உள்ளிட்ட இந்திய அணியினர் சென்ற விமானத்தில் அவரும் ஒருவராக சென்றார். அத்துடன் ராஜ்கோட் போட்டிக்கு முன்பாக ராகுல் டிராவிட், ரோஹித் சர்மா போன்ற அனைத்து இந்திய அணையினரை அவர் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

அதை தொடர்ந்து விரைவில் நடைபெறும் இராணி கோப்பைக்காக தம்முடைய சொந்த ஊரான ராஜ்கோட்டில் தற்போது பயிற்சிகளை தொடங்கியுள்ளதாக புஜாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் அதைப் பார்த்த ஷிகர் தவான் “பாய் போதும் நிறுத்துங்கள். இனிமேல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். உங்களுக்கு இராணி கோப்பை பாட்டியாகி விட்டது” என்று சிரித்துக்கொண்டே கிண்டலடிக்கும் வகையில் பதில் அளித்துள்ளார்.

 

முன்னதாக மிஸ்டர் ஐசிசி என்றழைக்கப்படும் ஷிகர் தவான் 37 வயது கடந்ததுடன் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டு வந்ததால் கில், இஷான் கிசான் போன்ற அடுத்த தலைமுறை வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதே போலவே டெஸ்ட் அணியிலும் கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ் போன்ற அடுத்த தலைமுறை வீரர்கள் வந்து விட்டதால் அதை புரிந்து கொண்டு இளம் வீரர்களுக்கு வழி விடுமாறு புஜாராவுக்கு அவர் நண்பனாக கலகலப்பான கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை