எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவேன் - ஷிவம் மாவி!

Updated: Sat, Dec 31 2022 11:00 IST
Image Source: Google

இந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெறும் டி20 தொடர் ஜனவரி 3,5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் நிலையில், டி.20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ரோஹித் சர்மா விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இடம்பெறாத இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட பட்டாளத்தை இந்திய அணி அறிவித்துள்ளது. இந்தத் தொடர் மற்ற தொடர்களை போன்று இல்லாமல் பெரும்பாலான இளம் வீரர்களை கொண்டு நடைபெறுவதால் இந்திய அணியின் பலம் எப்படி உள்ளது என்பதை சோதிப்பதற்கும் ஒரு நல்ல முயற்சியாக உள்ளது என்றும் பெரும்பாலானவர்கள் தெரிவித்து விடுகின்றனர்.

இந்த நிலையில் இந்த தொடரில் இடம் பெற்ற இளம் வீரர்கள் பலர், தங்களுடைய எதிர்பார்ப்புகளை செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதன்முறையாக சர்வதேச இந்திய அணி இடம் பிடித்திருக்கும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷிவம் மவி, இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா குறித்தும் தான் இந்திய அணியில் இடம் பெற்றிருப்பது குறித்தும் மனம் திறந்து பேசி உள்ளார்.

இதுகுறித்து ஷிவம் மவி பேசுகையில்,“ஹர்திக் பாண்டியா அணியில இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு வீரர்களுக்கும் உறுதுணையாக உள்ளார். ஐபிஎல் தொடரில் முதல் முறை கேப்டனாகி அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஆனால் அதை ஹர்திக் பாண்டியா செய்துள்ளார். ஹர்திக் பாண்டியா அமைதியான கேப்டனாக இருந்தாலும் அவர் எடுக்கும் முடிவு மிக தைரியமானதாகும்.

ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்டியாவிடம் நல்ல யுக்திகளும் விவேகமும் உள்ளது. யாருக்கு எந்த நேரத்தில் பந்து வீச கொடுக்க வேண்டும். யாருக்கு எந்த இடத்தில் பேட்டிங் கொடுக்க வேண்டும் என எல்லாமே அவருக்கு தெரிந்திருக்கிறது. இதனால் இந்த வாய்ப்பு எனக்கு எளிதாக இருக்காது என நன்றாக தெரியும். ஆனால் நிச்சயம் இந்த போட்டியில் நான் பங்கு பெறுவேன் என நம்புகிறேன், மேலும் இந்த தொடரை சிறப்பாக மாற்றி இந்திய அணி ரெகுலர் வீரராக உருவாவேன்” என ஷிவம் மவி தெரிவித்துள்ளார்.

2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ஷிவம் மவி ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 6 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை