இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள ஹொல்கார் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிதறடித்தனர். குறிப்பாக ஓப்பனிங் வீரர்கள் 212 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

Advertisement

தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் ஆட்டத்தின் முதல் ஓவரில் இருந்தே அதிரடியை தொடங்கினர். 85 பந்துகளை சந்தித்த கேப்டன் ரோகித் 101 ரன்களை விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் 78 பந்துகளில் 112 ரன்களை அடித்திருந்தார். இதில் 13 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

Advertisement

இந்த தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்த ஷுப்மன் கில், 2ஆவது போட்டியில் 40 ரன்களை அடித்திருந்தார். தற்போது 112 ரன்களை அடித்துள்ளதன் மூலம் இரு தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை அடித்தவர் பட்டியலில் பாபர் அசாமை சமன் செய்தார். பாபர் அசாம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கடந்த 2016ஆம் ஆண்டு 360 ரன்களை அடித்தார். தற்போது கில் நியூசிலாந்துக்கு எதிராக 360 ரன்களை விளாசியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் ஷிகர் தவானின் சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 4 சதங்களை அடித்த இந்தியராக ஷிகர் தவான் இருந்தார். அவர் 24 இன்னிங்ஸ்களை இதற்காக எடுத்துக்கொண்டார். ஆனால் ஷுப்மன் கில் தற்போது 21 இன்னிங்ஸ்களில் தனது 4ஆவது சதத்தை அடித்துவிட்டார்.

இப்படி சாதனையுடன் தொடக்க பார்ட்னர்ஷிப் அமைக்க, அதன்பின்னர் வந்த விராட் கோலி 36 ரன்கள், துணைக்கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 54 ரன்களையும் அடித்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்களை இழந்து 385 ரன்களை குவித்தது. இதையடுத்து தற்போது நியூசிலாந்து அணி இலக்கை துரத்தி விளையாடி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News