16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கான இரண்டாவது அணியை தீர்மானிக்கும், இரண்டாவது குவாலிஃபையர் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணிக்கு, விர்திமான் சஹாவும் – சுப்மன் கில்லும் நல்ல துவக்கம் கொடுத்தனர். 

Advertisement

பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய விர்திமான் சஹா 16 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன்பின் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் கூட்டணி சேர்ந்த சுப்மன் கில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை இலகுவாக எதிர்கொண்டு அசுரவேகத்தில் ரன்னும் குவித்தார்.

Advertisement

32 பந்துகளில் அரைசதம் அடித்த ஷுப்மன் கில் அடுத்த 17 பந்துகளில் அதவாது 49வது பந்தில் சதமும் அடித்து, நடப்பு தொடரில் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்தார். சதம் அடித்த பின்பும் அதிரடி ஆட்டத்தை கைவிடாத சுப்மன் கில் மொத்தம் 60 பந்துகளில் 10 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 129 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை இழந்தார்.

இதன்பின் களத்திற்கு வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 28 ரன்களும், பொறுமையாக விளையாடிய சாய் சுதர்சன் 43 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள குஜராத் அணி 233 ரன்கள் குவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பியூஸ் சாவ்லா மற்றும் ஆகாஷ் மத்வால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் சதம் அடித்ததுடன், கடைசி 4 இன்னிங்ஸில் மூன்று சதமும் அடித்து பல்வேறு சாதனைகளும் படைத்துள்ள ஷுப்மன் கில்லிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. சுப்மன் கில்லின் திறமையை முன்னாள் வீரர்கள் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News