பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியானது வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தார். இதனால் அந்த அணி முதல் இன்னிங்சில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement

பின்னர் 9 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் பிராத்வைத் அரைசதம் கடந்ததுடன் 52 ரன்களை சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக, இரண்டாவது இன்னிங்ஸில் 244 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கும் 254 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்காக நிர்ணயித்தது. 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் மீண்டும் வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இதனால் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 133 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரையும் சமன்செய்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத், "இது கவலைக்குரிய விஷயம். இந்த விஷயத்தில் நாம் முன்னேற வேண்டும். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் விளையாடியபோது, ​​கீழ் வரிசை பேட்ஸ்மேன்களை சீக்கிரமே அவுட்டாக்கினோம், அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் உலகின் சிறந்த கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

ஆனால் வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற தொடர்களில், கீழ் வரிசை பேட்ஸ்மேன்களை நாம்மால் விரைவாக வெளியேற்ற முடியவில்லை. இதன் காரணமாகவே நாம் தோல்வியைத் தழுவியுள்ளோம். அதனால் அதில் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமட்டுமின்றி, இது நமது பொறுப்புபாகும். ஆகவே இனி வரும் போட்டிகளில் நமது தவறுகளைத் திருத்தி முன்னேற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News