இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது.

Advertisement

இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 7 விக்கெட்டுக்கு 541 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4ஆவது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 512 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கருணாரத்னே 234 ரன்களுடனும், தனஞ்ஜெயா டி சில்வா 154 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Advertisement

இந்நிலையில் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 648 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. கருணாரத்னே 244 ரன்னிலும், தனஞ்ஜெயா டி சில்வா 166 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
 
107 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை ஆடிய வங்கதேசம் 2 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் இந்த டெஸ்ட் போட்டி முடித்துக் கொள்ளப்பட்டது. 

இதனால் ஆட்டம் டிராவில் முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இவ்விரு அணிகள் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி பல்லகெலே மைதானத்தில் வருகிற 29ஆம் தேதி தொடங்குகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News