SL vs BAN, 3rd ODI: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் குசால் மெண்டிஸ் சதமடித்து அசத்தியுள்ளார். 

Advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளன. இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 08) நடைபெற்றது. பல்லகலேவில் உள்ள பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் நிஷான் மதுஷ்கா ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியது. இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், பதும் நிஷங்கா 35 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸும் 16 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதனைத்தொடர்ந்து குசால் மெண்டிஸுடன் இணைந்த கேப்டன் சரித் அசலங்காவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.

Also Read: LIVE Cricket Score

இதில் குசால் மெண்டிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்த நிலையில், சரித் அசலங்காவும் அரைசதம் கடந்தார். அதன்பின் 58 ரன்களுடன் சரித் அசலங்கா ஆட்டமிழந்த நிலையில், 18 பவுண்டரிகளுடன் 124 ரன்களைச் சேர்த்த கையோடு குசால் மெண்டிஸும் விக்கெட்டை இழந்தனர். இதன் காரணமாக இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்களைச் சேர்த்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அஹ்மத் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News