இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரானது தற்போது கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்ததும் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. 

Advertisement

இந்த இரு தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது. அதன்படி டி20 போட்டிகள் வரும் 24, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் லக்னோ மற்றும் தர்மசாலா மைதானங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மார்ச் 4ஆம் நாள் முதல் 8ஆம் நாள் வரை முதலாவது டெஸ்ட் போட்டியும், மார்ச் 12 முதல் 16 வரை பெங்களூருவில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறும் என்று முடிவாகியுள்ளது.

Advertisement

அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் 28 வயதான சவுரவ் குமார் என்கிற வீரருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

ஏற்கனவே அணியில் ஜடேஜா, அஸ்வின் மற்றும் குல்தீப் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும் வேளையில் இவரைத் தேர்வு செய்தது ஏன் என்று ரசிகர்கள் தேடி வருகின்றனர். அந்த வகையில் அதற்கான விளக்கத்தை உங்களுக்காக நாங்கள் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். 

அதன்படி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சவுரவ் குமார் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்பது மட்டுமின்றி இடதுகை பேட்ஸ்மேன் ஆவார். கடந்த 2015ஆம் ஆண்டு முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் 304 ரன்கள் அடித்து மட்டுமின்றி 17 விக்கெட்டுகளையும் அவரது அறிமுக ரஞ்சித் தொடரிலேயே கைப்பற்றி அசத்தினார். அதோடு 2017-18 ரஞ்சி கோப்பையில் உத்தரப்பிரதேச அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை 23 விக்கெட்டுகளுடன் பெற்றார். மேலும் கடந்த முறை 2019-20 ஆண்டின் ரஞ்சிப் போட்டியில் 44 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இதுவரை முதல்தர கிரிக்கெட்டில் 46 போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கிலும் 8 அரை சதங்கள் 2 சதங்கள் என 1572 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இதன் காரணமாகவே அவரை ஒரு ஆல்-ரவுண்டராக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News