உள்நாட்டிலேயே நாம் தோற்றுவிடுவோம் - ஆகாஷ் சோப்ரா!

Updated: Wed, May 18 2022 22:36 IST
South Africa Will Win The Series If An Ordinary Team Is Picked – Aakash Chopra (Image Source: Google)

ஐபிஎல் 15ஆவது சீசன் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மே 29ஆம் தேதியுடன் இத்தொடர் முடிவடைகிறது. இந்த தொடரை முடித்தவுடன் தென் ஆப்பிரிக்க அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா மோதுகிறது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜூன் 17ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதற்கான வீரர்கள் தேர்வு தான் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, பண்ட், கே.எல்.ராகுல் உள்ளிட்டோருக்கு ஓய்வு தந்துவிட்டு, ஐபிஎல் தொடரில் கலக்கி வீரர்களுக்கு வாய்ப்பு தருகின்றனர்.

அதாவது கடந்தாண்டை போலவே இந்திய மெயின் அணிக்கு பதிலாக ஷிகர் தவான் தலைமையில் புதிய அணி ஒன்றை உருவாக்கவுள்ளனர். இந்திய மெயின் அணியை ஜூலையில் வரவுள்ள இங்கிலாந்து தொடருக்காக தயார் படுத்தவுள்ளனர். பலமான தென்னாப்பிரிக்க அணியை எப்படி புதிய படை சமாளிக்கும் என்பதில் ரசிகர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தென் ஆப்பிரிக்க தொடருக்கு புதிய அணியை முயற்சிக்க நினைப்பது சரியான முடிவு அல்ல. எதிரணியை சாதாரணமாக எடை போடுவதை மீண்டும் ஒருமுறை சிந்தனை செய்யுங்கள். இளம் வீரர்களுடன் கூடிய சாதாரண அணி இந்த தொடருக்கு சென்றால் நிச்சயம் தோற்றிவிடும்.

எனவே தேர்வுக்குழுவிடம் ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன். தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு ஓய்வு தரவில்லை என்றால் நாமும் மெயின் வீரர்களை கொண்டு தான் ஆட வேண்டும். ஏனென்றால் பவுமா அட்டகாசமான கேப்டன். டி காக், ரீசா ஹெண்ட்ரிக்ஸ் போன்றோர் அட்டகாசமான ஃபார்மில் உள்ளனர். ஓப்பனிங் முதல் பவுலிங் வரை சிறப்பாக உள்ளதால், உள்நாட்டிலேயே நாம் தோற்க நேரிடம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை