இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ சதமடித்தும், சரித் அசலங்கா அரைசதம் விளாசியும் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ 118 ரன்களையும், சரித் அசலங்கா 72 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மகாராஜ், ரபாடா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்கரம் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்க்ரம் 96 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அடுத்து வந்த கேப்டன் பவுமா 38 ரன்களிலும், ரஸ்ஸி வென்டெர் டுசென் 59 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதால் அந்த அணியால் இன்னிங்ஸ் முடிவில் 286 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

இதன் மூலம் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதோடு, ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News