ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
Advertisement
இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
Advertisement
இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இலங்கை அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20 சதவிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இக்குற்றத்தை இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானகா ஒப்புக்கொண்டதால் மேற்கொண்டு எந்த விசாரணைக்கும் ஆஜராக தேவையில்லை என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.