இந்த பந்துவீச்சாளர் நிச்சம் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார் - சுனில் கவாஸ்கர்!

Updated: Thu, Mar 03 2022 21:25 IST
Image Source: Google

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மொஹாலியில் தொடங்கவுள்ளது. கடைசியாக விளையாடிய தென் ஆப்பிரிக்க தொடரில் தோல்வியடைந்ததால், இதில் வெற்றி பெற இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனார்.

இந்த முறை சீனியர் வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பந்த் ஆகியோர் மீண்டும் அணிக்குள் இணைந்துள்ளனர். இந்த மூவர் கூட்டணி தான் ப்ளேயிங் லெவனிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பும்ராவுக்கு இந்த போட்டியில் சர்ஃப்ரைஸ் காத்துள்ளதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா இரண்டு முறையாவது 5 விக்கெட் ஹால் எடுப்பார் என நம்பிக்கை உள்ளது. இதில் ஆச்சரியப்படுவதற்கு இடமே இல்லை. ஏனென்றால் அந்த களத்தின் தன்மை அப்படி இருக்கும் குறிப்பாக பும்ராவின் திறமை மிகவும் அற்புதமானது.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அவர் உங்களுக்கு விக்கெட்களை எடுத்துக்கொடுப்பார். ஆட்டத்தின் முக்கியமான கட்டங்களிலும் எடுத்துக்கொடுக்கக் கூடியவர். எனவே இந்த காரணங்களும், பிட்ச்- தன்மையையும் வைத்து தான் அவர் 2 முறை 5 விக்கெட் ஹவுல் எடுக்க வாய்ப்புள்ளது” என  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை