ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 69ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஆபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

Advertisement

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியதுடன், முதல் குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். அதேசமயம் இப்போட்டியில் தோல்வியைத் தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Advertisement

அதன்படி இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய சூர்யகுமார் யாதவ், டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிகமுறை 25+ ரன்களை வீரர் எனும் டெம்பா பவுமா சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா 2019-20ஆம் ஆண்டி தொடர்ச்சியாக 13 முறை 25+ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் 14 முறை 25+ ரன்களை கடந்து அந்த சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 25+ ரன்கள் எடுத்த வீரர்கள்:

  • டெம்பா பாபுமா – 13 (2019-20)
  • சூர்யகுமார் யாதவ் – 13 (2025)
  • பிராட் ஹாட்ஜ் – 11
  • ஜாக் ருடால்ப் – 11
  • குமார் சங்கக்கார – 11
  • கிறிஸ் லின் – 11
  • கைல் மேயர்ஸ் – 11

அதுமட்டுமின்றி, ஒரு ஐபிஎல் சீசனில் அதிகபட்சமாக 25+ ஸ்கோர்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் கேன் வில்லியம்சன் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரின் சாதனையையும் முறியடித்து சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை படைத்துள்ளார். முன்னதாக கேன் வில்லியம்சன் கடந்த 2018ஆம் ஆண்டும், ஷுப்மன் கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனிலும் தலா 13 முறை 25+ ரன்களைச் சேர்த்திருந்த நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் 14 முறை 25+ ரன்களைச் சேர்த்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

ஒரு ஐபிஎல் சீசனில் அதிக 25+ ஸ்கோர்கள்:

  • சூர்யகுமார் யாதவ் – 14 இன்னிங்ஸ் (MI, 2025)
  • கேன் வில்லியம்சன் - 13 இன்னிங்ஸ் (SRH, 2018)
  • ஷுப்மான் கில் - 13 இன்னிங்ஸ் (GT, 2023)
  • விராட் கோலி - 12 இன்னிங்ஸ் (RCB, 2016)
  • டேவிட் வார்னர் - 12 இன்னிங்ஸ் (SRH, 2016)
Advertisement

இதுதவிர்த்து இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் 2 சிக்ஸர்களை அடித்தன் மூலம், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இரு சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொட்ரில் சனத் ஜெயசூர்யா 31 சிக்ஸர்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் 32 சிக்ஸர்க்ளை அடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள்

  • 32- சூர்யகுமார் யாதவ், 2025
  • 31 - சனத் ஜெயசூரிய, 2008
  • 30 - இஷான் கிஷன், 2020
  • 29 - கீரன் பொல்லார்ட், 2013
  • 29 - ஹர்திக் பாண்டியா, 2019

Also Read: LIVE Cricket Score

Advertisement

இப்போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி சூர்யகுமார் யாதவின் அரைசதத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி பிரியன்ஷ் ஆர்யா மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோரது அரைசதங்கள் காரணமாக 18.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றும் அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News