இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி மூனறாவது போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகின்றனர்.

Advertisement

இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று (ஜனவரி 31) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். ஆனால் சமீபகாலங்களில் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம் கவலையளிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில் அவர் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்ஸில் ஒரு அரைசதத்தை மட்டுமே அடித்துள்ளார். மேலும் இத்தொடரிலும் அவர் 0,12,14 ரன்களுக்கு விக்கெட்டை இழந்துள்ளார்.

சர்வதேச டி-20 போட்டிகளில் 150 சிக்ஸர்கள்

ஒருவேளை இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் தனது ஃபார்முக்கு திரும்பி 4 சிக்ஸர்கள் அடித்தால், சர்வதேச டி20 போட்டிகளில் தனது 150 சிக்ஸர்களை நிறைவு செய்வார். இந்த வடிவத்தில் இதுவரை நான்கு வீரர்கள் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். அதன்படி இந்தியாவின் ரோஹித் சர்மா, நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில், யுஏஇ-ன் முகமது வாசிம் மற்றும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் ஆகியோர் மட்டுமே இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

டி20 போட்டிகளில் 350 சிக்ஸர்கள்

Advertisement

இந்த வடிவத்தில் சூர்யகுமார் இதுவரை 307 போட்டிகளில் 283 இன்னிங்ஸ்களில் 342 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்நிலையில் அவர் 9 சிக்ஸர்களை அடித்தால், டி20 கிரிக்கெட்டில் 350 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெறவுள்ளார். இந்திய அணிக்காக இதுவரை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மட்டுமே இந்த மைல் கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

8000 டி20 ரன்கள்

இதுதவிர்த்து இத்தொடரில் சூர்யகுமார் யாதவ் 99 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் தனது 7000 ரன்களை பூர்த்தி செய்வார். இதனைச் செய்யும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு பிறகு இந்த மைல் கல்லை எட்ட்ம் 5ஆவது வீரர் எனும் பெருமையையும் பெறுவார். இதுவரை 307 போட்டிகளில் 283 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 7901 ரன்களை எடுத்துள்ளார்.

Advertisement

இந்திய அணியின் உத்தேச லெவன்: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர்/ரமன்தீப் சிங், முகமது ஷமி, ரவி பிஷ்னோய்/அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News