டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றின் கடைசிப் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நமீபியா அணி அஸ்வின், ஜடேஜா ஆகியோரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 

Advertisement

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - கேஎல் ராகுல் இணை அதிரடியா தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

அதன்பின் 52 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ்வும் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். 

Also Read: T20 World Cup 2021

Advertisement

இதன்மூலம் 15.2 ஓவர்களிலேயே இந்திய அணி இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இருப்பினும் இந்திய அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News