இது எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு தெரியவில்லை - விராட் கோலி

Updated: Sun, Oct 23 2022 22:27 IST
T20 WC: "Special win": Virat Kohli after India's final-ball thriller against Pakistan (Image Source: Google)

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றி இலக்கான 160 ரன்களை எட்டியது. இதன் மூலம் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றிபெற்றது.

இந்நிலையில், சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 82 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

போட்டிக்கு பின் வெற்றி குறித்து விராட் கோலியிடன் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், “இது கனவு போன்ற சூழ்நிலை. என்னிடம் பேச வார்த்தையில்லை. இது எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு தெரியவில்லை. நாம் கடைசி வரை களத்தில் இருப்போம் என்று ஹர்திக் பாண்டியா என்னிடம் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார். நான் வார்த்தைகளை இழந்துவிட்டேன்.

ஷாகின் அஃப்ரிடி பந்து வீச வந்தபோது (18ஆவது ஓவர்) அவர் பந்து வீச்சை நாம் விளாச வேண்டும் என்று ஹர்திக் இடம் கூறினேன். கணக்கீடுகள் மிகவும் எளிமை. நவாஸ் ஒரு ஓவர் வீசவேண்டியிருந்தது. ஆகையால் (19ஆவது ஓவரில்) ஹாரிஸ் ராவுஃப் ஓவரை நான் விளாசினால் அவர்கள் பீதியடைவார்கள். கடைசி 6 பந்தில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று மாறியது. நான் என் வார்த்தைகளை இழந்துவிட்டேன்.

ராவுஃப் வீசிய 19ஆவது ஓவரை உள்ளுணர்வாகப் பார்த்தேன். அமைதியாக இருக்கும்படி எனக்கு நானே கூறிக்கொண்டேன். லாங் - ஆன் (முதல் சிக்சர்) சிக்சர் எதிர்பார்க்காத ஒன்று. அது, மெதுவான வீசப்பட்ட லென்த் பந்து. பைன் லெக் திசையில் அடித்த 2ஆவது சிக்ஸர் எப்படியென்றால், பந்து வந்த திசையை நோக்கி நான் என் பேட்டை சுழற்றினேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை