ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

Advertisement

இந்நிலையில் மெல்போர்ன் மைதானத்தில் இன்று இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் ஃபீல்டிங் செய்வதாக தீர்மானித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். 

Advertisement

அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இணை களமிறங்கியது. இருவரும் அதிரடியாக இன்னிங்ஸைத் தொடங்கினாலும் முதல் சில ஓவர்களிலேயே தடுமாற தொடங்கினர். இதன் விளைவாக 15 ரன்கள் எடுத்திருந்த முகமது ரிஸ்வான் சாம் கரன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் களமிறங்கிய முகமது ஹாரிஸ் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆதில் ரஷித் வீசிய முதல் பந்திலேயே தூக்கி அடிக்க முயற்சித்து பென் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து கேப்டன் பாபர் ஆசாமும் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆதில் ரஷித் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதனைத்தொடர்ந்து வந்த இஃப்திகார் அஹ்மத் ரன் ஏதுமின்றி பென் ஸ்டோக்ஸிடம் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷான் மசூத் - சதாப் கான் இணை ஓரளவு சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.

ஆனால் 38 ரன்களில் ஷான் மசூதும், 20 ரன்கைள் சதாப் கானும் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழக்க, பாகிஸ்தான் அணியின் ரன் வேகமும் குறைந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது.

Advertisement

இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய சாம் கரண் 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் ஆதில் ரஷித் மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News