ஆஸ்திரேலிய அரசு அதன் கொள்கைகளை கிரிக்கெட்டில் திணிக்க வேண்டாம் - ஏசிபி வலியுறுத்தல்!

Updated: Wed, Mar 20 2024 20:27 IST
ஆஸ்திரேலிய அரசு அதன் கொள்கைகளை கிரிக்கெட்டில் திணிக்க வேண்டாம் - ஏசிபி வலியுறுத்தல்! (Image Source: Google)

கடந்தாண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியா அணி ஆஃப்கானிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது. மேலும் இத்தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவும் இருந்தது. ஆனால் ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப்பிடித்த பின் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு உரிய கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அதை எதிர்க்கும் விதமாக ஆஃப்கானிஸ்தான் அணியுடனான தொடரை ரத்து செய்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த டி20 தொடரையும் ஆஸ்திரேலிய அணி ரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, ஆஃப்கானிஸ்தானில் பெண்களுக்கான மனித உரிமைகள் சீரழிந்து வருவதைக் காரணம் காட்டி அந்நாட்டு அணிக்கு எதிரான டி20 தொடரை ஒத்திவைப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதையடுத்து ஆஸ்திரேலியாவின் இந்த முடிவுக்கு ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதில் கருத்தினை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆஃப்கானிஸ்தானில் விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் ஆப்கானிஸ்தான் தேசத்தின் மகிழ்ச்சி ஆகியவற்றின் தொடர்பைக் கருத்தில் கொண்டு கிரிக்கெட்டில் அரசியல் தலையீட்டை தவிர்க்க வேண்டும்.

ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் இருந்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா எதிர்கொள்ளும் அழுத்தங்களை ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்கிறது. மேலும் இரு கிரிக்கெட் வாரியங்களுக்கிடையில் கூட்டு முயற்சிகள் மூலம் இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறோம். இதனால் ஆஸ்திரேலிய அரசாங்கம் கிரிக்கெட் வாரியங்களில் அதன் கொள்கைகளை திணிக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக பிராந்தியங்கள் முழுவதும் கிரிக்கெட் வளர்ச்சியை ஆதரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஏசிபி வலியுறுத்துகிறது.

மேலும், ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உயர்மட்ட நிர்வாகம் முன்பு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொடரை திரும்பப் பெறுவதைப் பகிரங்கமாக அறிவிப்பதற்குப் பதிலாக மாற்றுத் தீர்வுகளை ஆராய முன்வந்தது. ஆனால் அதனையும் மீறி தற்போது மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தொடரை ஒத்திவைத்திருப்பது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது” என அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை