ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் எலைட் குரூப் டி பிரிக்காவுக்கான லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் சண்டிகர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தமிழ்நாடு அணி ஆண்ட்ரே சித்தார்த்தின் அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஆண்ட்ரே சித்தார்த் 106 ரன்களையும், ஜெகதீசன் 63 ரன்களையும் சேர்த்தனர். சண்டிகர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய விஷு காஷ்யப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Advertisement

இதனையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த சண்டிகர் அணியில் தொடக்க வீரர் ஷிவம் பாம்ப்ரி பொறுப்புடன் விளையாடி சதமடித்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் விளையாடிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி 74.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் அஜித் ராம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 97 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்த தமிழ்நாடு அணியில் விஜய் சங்கர் சதமடித்து அசத்தியதுடன் 150 ரன்களையும், ஜெகதீசன் 89 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இதன்மூலம் தமிழ்நாடு அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதன்மூலம் தமிழ்நாடு அணி சண்டிகர் அணிக்கு 403 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. 

அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சண்டிகர் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் சண்டிகர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை சண்டிகர் அணியின் கேப்டன் மனன் வோரா 47 ரன்களுடனும், விஷு காஷ்யப் ஒரு ரன்னுடனும் தொடர்ந்தன்ர். இதில் காஷ்யப் 4 ரன்னிலும், மயங்க் சிது 8 ரன்னிலும், ஜக்ஜித் சிங் 5 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மனன் வோரா சதமடித்து அசத்திய நிலையிலும், மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் சண்டிகர் அணி 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷோர், அஜித் ராம் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் தமிழ்நாடு அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் சண்டிகர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News