இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணி ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

இருபினும் அபிநவ் மனோஹரின் சிறப்பான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் கர்நாடகா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அபிநவ் மனோகர் 46 ரன்களைச் சேர்த்தார். தமிழ்நாடு அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின் இலக்கைத் துரத்திய தமிழ்நாடு அணிக்கு ஹரி நிஷாந்த் - ஜெகதீசன் இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் ஹரி நிஷாந்த் 23 ரன்களில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த சாய் சுதர்சன் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ஜெக்தீசனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விஜய் சங்கரும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தார். 

இதில் 46 பந்துகளில் 41 ரன்களைச் சேர்த்திருந்த ஜெகதீசன் ஆட்டமிழக்க, விஜய் சங்கரும் 18 ரன்களோடு வெளியேரினார். இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் தமிழ்நாடு அணி வெற்றிபெற 30 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

Advertisement

இதில் அதிரடியாக விளையாடிய ஷாருக் கான் கடைசி பந்தில் சிக்சர் விளாசி போட்டியை முடித்து வைத்தார். இதன் மூலம் தமிழ்நாடு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடாகாவை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது. இதில் ஷாருக் கான் 15 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 33 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக தமிழ்நாடு அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்று சாதித்தது. மேலும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அதிகமுறை கோப்பையை வென்ற அணி எனும் பெருமையையும் தமிழ்நாடு அணி பெற்றது. 

சையத் முஷ்டாக் அலி 2021: ஷாருக் கான் அதிரடியில் மூன்றாவது கோப்பையை வென்றது தமிழ்நாடு!

Advertisement

இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணி ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இருபினும் அபிநவ் மனோஹரின் சிறப்பான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் கர்நாடகா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அபிநவ் மனோகர் 46 ரன்களைச் சேர்த்தார். தமிழ்நாடு அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

Advertisement

அதன்பின் இலக்கைத் துரத்திய தமிழ்நாடு அணிக்கு ஹரி நிஷாந்த் - ஜெகதீசன் இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் ஹரி நிஷாந்த் 23 ரன்களில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த சாய் சுதர்சன் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ஜெக்தீசனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விஜய் சங்கரும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தார். 

இதில் 46 பந்துகளில் 41 ரன்களைச் சேர்த்திருந்த ஜெகதீசன் ஆட்டமிழக்க, விஜய் சங்கரும் 18 ரன்களோடு வெளியேரினார். இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் தமிழ்நாடு அணி வெற்றிபெற 30 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

Advertisement

இதில் அதிரடியாக விளையாடிய ஷாருக் கான் கடைசி பந்தில் சிக்சர் விளாசி போட்டியை முடித்து வைத்தார். இதன் மூலம் தமிழ்நாடு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடாகாவை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது. இதில் ஷாருக் கான் 15 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 33 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.

Also Read: T20 World Cup 2021

இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக தமிழ்நாடு அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்று சாதித்தது. மேலும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அதிகமுறை கோப்பையை வென்ற அணி எனும் பெருமையையும் தமிழ்நாடு அணி பெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News