தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதால் டெஸ்ட் போட்டி டர்பனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் நாளில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமும் அத்துடன் கைவிடப்படுவதாக அறிவித்தது. 

Advertisement

இதனையடுத்து இரண்டாவது நாள் ஆட்டத்தில் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி கேப்டன் டெம்பா பவுமா 70 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழ்ந்தனார். இலங்கை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய் அசிதா ஃபெர்னண்டோ மற்றும் லஹிரு குமரா தலா 3 விக்கெட்டுகளும், பிரபாத் ஜெயசூர்யா, விஷ்வா ஃபெர்னண்டோ தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Advertisement

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொட்ங்கிய இலங்கை அணி தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததுட்ன், 13.5 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு வெறும் 42 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் கமிந்து மெண்டீஸ் 13, லஹிரு குமரா 10 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜான்சன் 7 விக்கெட்டை கைப்பற்றினார்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டெம்பா பவுமா 24 ரன்களுடனும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா அடித்த ஒரு சிக்ஸர் குறித்த காணொலி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

அதன்படி, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரா வீசிய பவுன்சர் பந்தை டெம்பா பவுமா காற்றில் பறந்து அப்பர் கட் ஷாட்டை விளையாடினார். அந்த பந்தானது தேர்ட்மேன் திசையில் சிக்ஸருக்கு சென்றது. இந்த ஷாட்டை பார்த்த ரசிகர்கள் ஒரு கணம் வியப்பில் ஆழ்ந்தனர். இந்நிலையில் டெம்பா பவுமா அடித்த இந்த அப்பர் கட் சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News