இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 345 ரன்களை குவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மூன்றாம் நாளில் நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. 

Advertisement

இந்தப் போட்டியில் அறிமுக வாய்ப்பைப் பெற்ற இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார்.

Advertisement

மேலும் இந்திய அணிக்காக அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 16ஆவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இந்நிலையில் அடுத்த போட்டியில் கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்புவதால் ஸ்ரேயாஸ் ஐயர்அடுத்த போட்டியில் விளையாடுவாரா ? என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது.

இந்நிலையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லக்ஷ்மன் கூறுகையில் வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். 

இதுகுறித்து பேசிய அவர், “விராட்கோலி அணிக்கு திரும்பும் பட்சத்தில் நிச்சயம் ஸ்ரேயாஸ் ஐயர் தனது இடத்தை இழப்பார் அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஏனெனில் ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 2016 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது ரஹானேவிற்கு பதிலாக களமிறங்கிய கருண் நாயர் முச்சதம் அடித்து அசத்தி இருந்தார். 

ஆனால் அடுத்த போட்டியில் ரஹானே விளையாட வந்துவிட்டதால் கருண் நாயர் வேறு வழியின்றி வெளியேற்றப்பட்டார். அதேபோன்று இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கோலி வருவதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் தனது இடத்தை விட்டு கொடுத்தாக வேண்டும்.

Advertisement

என்னைப்பொறுத்தவரை அவர் அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை. இந்திய அணியில் இது எழுதப்படாத ஒரு விதியாக இருந்து வருகிறது. இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஹானே மோசமான ஃபார்மில் இருப்பதால் அவரது இடத்திற்கு ஆபத்து இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News